Monday, December 21, 2009

முறுக்கு



அரிசி - 3 கப்

கடலைப்பருப்பு - ஒரு கப்

பயத்தம்பருப்பு - கால் கப்,

எள் ‍சிறிது

சீரகம் சிறிது

வெண்ணெய் - சிறிது
உப்பு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் சலித்து கொள்ளவும். இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம் சேர்த்து தேவையான‌ தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். சூடான‌ எண்ணெயை சிறிது அதில் ஊற்ற‌வும்முறுக்கு மிஷினில் ஒரு ரவுண்ட் உள்ள‌ அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு தட்டில் பிழிந்து காய்ந்த எண்ணெயில் போடவும். பொன்னிறமானதும் எடுக்கவும்

Thursday, December 17, 2009

சுகினி பாசிபருப்பு கூட்டு


தேவையானவை:

சுகினி இரண்டு

பாசி பருப்பு 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்

பச்ச‌மிள‌காய் நான்கு

சீர‌க‌ம் சிறிது

செய்முறை:

சுகினி ஸ்கின் எடுத்து பொடி பொடியாக‌ க‌ட் பண்ணி பாசி ப‌ருப்புட‌ன் சேர்த்து குக்கரில் 2 விசில் வேக‌ விடவும்.தேங்காய், ப‌ச்ச‌ மிள்காய்,சீர‌க‌ம் சேர்த்து கெட்டியாக‌ அரைத்து காயுட‌ன் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வ‌ந்த‌தும் க‌டுகு, க‌றிவேப்பிள்ளை தாளிக்க‌வும்

கடலை மாவு லட்டு


கடலைமாவு - ஒரு கப்

சுகர் - இரண்டு கப்


நெய் - ஒரு கப்

ஏலம்
‍‍‍
பால் ‍ ‍-‍ ‍‍2 ஸ்பூன் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


செய்முறை:

கடலை மாவை அடுப்பில் வைத்து நன்கு வறுத்து கொள்ளவும் பச்ச வாடை போகும் வரை.

கடலை மாவு, சுகர், நெய், ஏலம் எல்லாவற்றையும் கலந்து ஒரு மைக்ரோவேவ் ஓவன் பாத்திரத்தில் போட்டு 4 நிமிடம் வைக்கவும். இரண்டு நிமிடம் ஆனதும் அதை வெளியில் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் பால் விட்டு கலக்கவும்.பின்னர் அதை மீண்டும் அவனின் உள்ளே வைத்து 3 நிமிடம் வைக்கவும்.வெளியில் எடுத்து ஒரு கிளறு கிளறி நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.


உட‌னே சாப்பிட்டால் ஷாஃப்டா இருக்கும்.

Monday, December 14, 2009

கோவைகாய் வறுவல்


கோவைக்காய் 1 பவுண்ட்

வறுக்க:
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
உளுந்த‌ம்ப‌ருப்பு 1 டேபிள்ஸ்பூன்
த‌னியா 1/2 டீஸ்பூன்
மிள‌காய் வ‌த்த‌ல் 3
புளி சிறிது
தேங்காய் 1 சின்ன‌ பீஸ்
சிறிது ஆயில் விட்டு வ‌றுத்து க‌ர‌க‌ர‌ப்பாக‌ ப‌வுட‌ர் ப‌ண்ண‌வும்


செய்முறை:

காயை நீள‌மாக‌ க‌ட் ப‌ண்ணி உப்பு ம‌ஞ்ச‌ள்தூள் சிறிது மிள‌காய் தூள் சேர்த்துவேக‌விட்டு வைக்கவும். ச‌ட்டியில் தாளித்து காயை போட்டு வ‌த‌க்க‌வும். அதில் அரைத்த‌ ப‌வுட‌ரை போட்டு ந‌ன்கு கிள‌றி இற‌க்க‌வும்

குறிப்பு:ப‌வுட‌ரை க‌ர‌க‌ர‌ப்பாக‌ ப‌வுட‌ர் ப‌ண்ண‌வும் அதான் டேஸ்டு

கொண்டைகடலை குருமா


கறுப்பு கொண்டைகடலை -1கப்

வெங்காயம் -1

தக்காளி -ஒன்று


இஞ்சி&பூண்டு விழுது -1ஸ்பூன்

சோம்பு 1/2 டீஸ்பூன்

ப‌ட்டை 1

கிராம்பு 3

ஏல‌ம் ௧

க‌ச‌க‌சா 1 டீஸ்பூன்

சீரக‌ம் 1/2 டீஸ்பூன்

மிள‌காய் வ‌த்த‌ல் ௫

த‌னியா ப‌வுட‌ர் 1 டீஸ்பூன்

தேங்காய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு

மல்லி -சிறிது

தாளிக்க‌:
பட்டை,கிராம்பு,ஏலக்காய்

செய்முறை
கடலையை 10மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி,பட்டை, கிராம்பு,ஏலம் சோம்பு,மிளகாய் வத்தல்,தனியா பௌடர்,சீரகம்,கசகசா, தேங்காய் சிறிது எண்ணையில் வதக்கி அரைக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு தாளித்து இஞ்சி&பூண்டு விழுது, அரைத்ததையும் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். உப்பு கொத்தமல்லிதழை போட்டு வதக்கவும். வேகவைத்த கொண்டைகடலை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.மசாலா ஒன்றுசேர்ந்து திக்கானவுடன் இறக்கவும்

குறிப்பு:
ரெம்ப‌ நேர‌ம் வ‌றுக்க‌ கூடாது க‌ச‌ந்து விடும் உருளைகிழ‌ங்கு வேக‌வைத்து போட‌லாம் இது சாத‌த்திற்கு ந‌ல்லா இருக்கும்

Friday, December 4, 2009

இடியாப்பம்


பச்சரிசி 2கப்
உப்பு

செய்முறை:
பச்சரிசியை சிறிது நேரம் ஊறவிட்டு நிழலில் காயவிட்டு மிக்ஸியில் பவுடர் பண்ணவும்.
இடித்த மாவினை இலேசாக வறுத்து, சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீரை மிதமாக கொதிக்க வைத்து (நன்கு கொதித்துவிடக் கூடாது, ஆறியும் இருக்கக்கூடாது), தேவையான அளவு மாவில் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, இடியாப்பக்குழலில் இட்டு பிழிந்து குக்கரில் ஸ்டீம் பண்ணவும்

பட்டர் பனீர் மசாலா


பனீர் 1 கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்
உப்பு
பட்டர் 3டேபிள் ஸ்பூன்
பட்டை 3
லவங்கம் 2
ஏலக்காய் 2
வெங்காயம் 1
மஞ்சள் தூள் ‍ சிறிது
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 2டீஸ்பூன்
கர‌ம் மசாலா 1டீஸ்பூன்
தக்காளி 3
கசகசா 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிபருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
சுக‌ர் பின்ச்
கொத்தமல்லி தலை
செய்முறை
பனீரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (பொறிக்காமலும் போடலாம்)தக்காளியை சுடு த‌ண்ணீரில் போட்டு ஐந்து நிமிட‌ம் மூடி வைக்கவும் ஆனியனை மிக்ஸியில் அரைத்து வைக்க‌வும்,த‌க்காளி த‌னியா அரைக்க‌வும் முந்திரிப‌ருப்பு க‌ச‌க‌சா த‌னியா அரைத்து வைக்க‌வும்.ச‌ட்டியில் ப‌ட்ட‌ர் போட்டு ப‌ட்டை, கிராம்பு,ஏல‌ம் போட்டு தாளிக்க‌வும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ந‌ல்லா வ‌த‌க்க‌வும் அரைத்த ஆனிய‌னை சேர்த்து ந‌ன்கு க‌ல‌க்க‌வும்,பின் அரைத்த‌ த‌க்காளி அரைத்த‌தை போட்டு சில்லிப‌வுட‌ர்,த‌னியாப‌வுட‌ர்,க‌ர‌ம் ம‌சாலா,சுக‌ர் போட்டு ந‌ன்கு வ‌த‌க்க‌வும் அதில் அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி க‌ல‌க்கி கொதிக்க‌விட‌வும் க‌டைசியில் க‌ச‌க‌சா முந்திரி அரைத்த‌ க‌ல‌வையை போட்டு ந‌ன்கு கிள‌றி,பொறித்த பனீரை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிட‌ம் கொதிக்க‌விட‌வும் ம‌ல்லி இலை தூவ‌வும்கொஞ்சம் ரிச்சாக வேண்டுமென்றால் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கலாம்
ச‌ப்பாத்தி,புலாவ், புரோட்டா,பிரியானிக்கு ந‌ல்லா இருக்கும்

பணியாரம்


அதிரசம் மாவு 1 கப்
ஆயில்
செய்முறை
அதிரசமாவை சிறிது சுடு தண்ணீரில் ஊறவைக்கவும் கட்டியில்லாமல் கரைக்கவும் ரெம்ப தண்ணியாக இல்லாமல் ரெம்ப கட்டியாக இல்லாமல் கரைக்கவும்

சட்டியில் எண்ணெயை காய வைத்து இதிலிருந்து எடுத்து ஊற்றவும்

அதிரசம்


தேவையான பொருட்கள்:

ப.அரிசி ‍ 2 கப்

வெல்லம் ‍ 1 கப்

ஏலக்காய் ‍ 1 டீஸ்பூன்

நெய் - மூன்று டேபிள் ஸ்பூன்

ஆயில்

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடித்து விட்டு சிறிது நேரம் நிழலில் காய விடவும் பாதி ஈரமாக இருக்கும் போதே மிக்ஸியில் போட்டு திரித்து சல்லடையில் சலித்து மாவு தாயாரிக்கவும். மாவு ஈரமாக இருக்கும் போதே அடுப்பில் சட்டியை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்க்கவும் வடி கட்டி கொதிக்க அடுப்பை சிம்மில் வைத்து பாகு வைக்கவும் கப்பில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் சிறிது பாகை ஊற்றி அது பிடிக்கிற பதம் வந்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு கிண்ட வேண்டும். பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும். மாவு இருக்கமாக இருக்கக் கூடாது. சிறிது தளர இருக்க வேண்டும். மாவை உருண்டைய்யாக உருட்டினால் வெடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, மாவை ஒரே உருண்டையாக உருட்டி சுற்றி நெய் தடவி அதில் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் மிதமான தீயில் எண்ணையை சூடாக்கவும். சிறிய அளவு மாவை உருண்டையாக உருட்டி பிறகு லேசாக தட்டி எண்ணையில் போட்டு பொறித்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.