Tuesday, September 15, 2009

கனகதார ஸ்தோத்ரம்



1.அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:
மாலவன் மார்பில் நிற்கும்மங்கலக் கமலச் செல்வீ!

மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டைமாதுநீ என்னி டத்தில் வைத்தனை என்றால் நானும்காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுகன்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே

2 -முக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி க(3)தாக(3)தானி
மாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய

நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டுநிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டுகோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு,கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்றுஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டுஅடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே !
3.ஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்
ஆனந்த(3)கந்த(3) மனிமேஷ-மனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்
பூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:

நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்!பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்துமூடிபரம்பரைப் பெருமை காப்பார் !பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலேஅச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டுஆனந்தம் கொள்வதுண்டு !இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே !இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே !

4. பா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா(4)தி
காமப்ரதா(3) ப(4)க(3)வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா

மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னைமாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டுஅண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்பிழைப்பன்யான் அருள்செய்வாயே,பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே !

5.காலாம்பு(3)தாளி லலிதோரஸி கைடபா(4)ரே:
தா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ
மாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:
ப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:

கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்புகார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலைமைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்!கொய்தெடு விழியை என்மேல் கொண்டுவந் தருள்செய் வாயேகொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே !

6.ப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்
மாங்கல்யபா(4)ஜி மது(4)மாதினி மன்மதேன
மய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்
மந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:
போரினில் அரக்கர்கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னைபோரின்றிக் குருதி யின்றிப் புறங்காணத் துடித்து வந்தமாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய் ?மங்கையின் விழிகளன்றோ ! மாலவன் தன்னை வென்றதேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலேதிருமலை வேங்க டேசன் திறத்தினை வென்றான் அன்றோ!கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே !

7. விச்(H)வாமரேந்த்(3)ர பத(3)விப்(4)ரமதா(3)த(3)க்ஷ‍
மானந்த(3) ஹேதுரதி(4)கம் மது(4_வித்(3)விஷோ(அ)பி
ஈஷன்னிஷீத(3)து மய க்ஷணமீக்ஷணார்த(4)‍மிந்தீவரோத(3)ர ஸஹோத(3)ர மிந்தி(3)ராயா:

மந்திரம் உரைத்தாற் போதும் மலரடி தொழுதாற் போதும்
மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும் !எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே!

8.இஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்

த்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே

த்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:

எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி ?இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி ?தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும் !தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும் !அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும் !இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே !இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் தாயே !

9.த(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்

அஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே
து(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்

நாராயணப்ரணயினீ நயனாம்பு(3)வாஹ:

நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்நேர்கொண்ட மாந்தர்வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!தேர்கொண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவியாலேதிருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே !
10. கீ(3)ர்தே(3)வதீதி க(3)ருட(3)த்(4)வஜ ஸுந்த(3)ரீதி

சா(H)கம்ப(4)ரீதி ச(H)சி(H)சே(H)கர வல்லபே(4)தி

ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயை

தஸ்யை நமஸ்த்ரிபு(4)வனைக கு(3)ரோஸ்தருண்யை

ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி!அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி !ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்!அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்!தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாகதிரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்!வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே !வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே!

11.ச்(H)ருத்யை நமோ(அ)ஸ்து சு(H)ப(4)கர்ம பலப்ரஸூத்யை

ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீய கு(3)ணார்ணவாயை

ச(H)க்த்யை நமோ(அ)ஸ்து ச(H)தபத்ர நிகேதனாயை

புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தம வல்லபா(4)யை

வேதத்தின் விளைவே போற்றி ! வினைப்பயன் விளைப்பாய் போற்றி !சீதத்தா மரையே போற்றி ! செம்மைசேர் அழகே போற்றி !கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி !ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி !பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி !நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி ! போற்றி !பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி ! போற்றி !மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி ! போற்றி !

12.நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை

நமோ(அ)ஸ்து து(3)க்(3)தோ(4)த(3)தி(4) ஜன்மபூ(4)ம்யை

நமோ(அ)ஸ்து ஸோமாம்ருத ஸோத(3)ராயை

நமோ(அ)ஸ்து நாராயண வல்லபா(4)யை

அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி !அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி !குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி !குளிர்ந்தமா மதியி னோடும் குடி வந்த உறவே போற்றி !sமன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி !sமாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி !என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி !எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி ! போற்றி !

13.நமோஸ்து ஹேமாம்பு(3)ஜ பீடிகாயை

நமோஸ்து பூ(4)மண்ட(3)ல நாயிகாயை

நமோஸ்து தே(3)வாதி(3) த(3)யாபராயை

நமோஸ்து சா(H)ர்ங்காயுத(4) வல்லபா(4)யை

தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி !தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி !தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி !தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி !தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி !தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி !தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி ! போற்றி !

14.நமோஸ்து தே(3)வ்யை ப்(3)ருகு(3)நந்த(3)னாயை

நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை

நமோஸ்து தா(3)மோத(4)ர வல்லபா(4)யை

பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி!பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி!தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி!தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி!சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி!ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி!பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி!பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி!

15.நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை

நமோஸ்து பூ(4)த்யை பு(4)வனப்ரஸூத்யை

நமோஸ்து தே(3)வாதி(3)பி(4): அர்ச்சிதாயை

நமோஸ்து நந்தா(3)த்மஜ வல்லபா(4)யை

கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி!கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி!மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி!மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி!விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி!விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி!எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி!இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி!

16. ஸம்பத்கராணி ஸகலேந்த்(3)ரிய நந்த(3)னானி

ஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி

த்வத்(3)வந்த(3)னானி து(3)ரிதாஹரணோத்(3)யதானி

மாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே

மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி !வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி !மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி !விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி !கைநிறை செல்வம் யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி !காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி !செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி !சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி ! போற்றி

17.யத் கடாக்ஷ ஸமுபாஸனாவிதி(4):

ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத(3):

ஸந்தனோதி வசனாங்க மானஸை:

த்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே!

மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி !மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி !தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி !தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி !ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி !ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி !தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி !தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி ! போற்றி

18.ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

த(3)வளத(3)மாம்சு)(H)க க(3)ந்த(4)மால்ய சோ(H)பே(4)

ப(4)க(3)வதி ஹரிவல்லபே(4) மனோக்ஞே

த்ரிபு(4)வன பூ(4)திகரி ப்ரஸீத(3)மஹ்யம்

கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி!காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி!வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி!வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி!பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி!பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி!விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி!வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி!
19.தி(3)க்(3)க(3)ஸ்திபி(4): கனககும்ப(4) முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாலுதாங்கீம்

ப்ராதர்நமாமி ஜக(3)தாம் ஜனனீமசே(ஹ்)ஷ

லோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்

மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்திமங்கைக்கு நன்னீராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்திதண்டலக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டிமண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கிமறுவிலாப் பளிங்fகின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே!அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்!

20.கமலே கமலாக்ஷ வல்லபே(4)த்வம்

கருணாபூர தரங்கி(3)தைர பாங்கை:

அவலோகய மாம் அகிஞ்சனானாம்

ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:

பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே!பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ!ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையோன் ஒருவ னேதான்இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்!தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்சநிதிரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி!

21.ஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்

த்ரயீமயீம் த்ரிபு(4)வனமாதரம் ரமாம்

கு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:

ப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:

முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி!மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாகஅற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதிஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்இப்பொழுது ரைத்த பாடல் எவரெங்குபா டினாலும்இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்;நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும்; என்றும்நாட்டுக்கே ஒருவ ராக நாளவர் உயர்வார் உண்மை!

1 comment:

Reply Me