Tuesday, September 29, 2009

அபிராமி ஸ்லோகம்


நமஸ்தே லலிதே மி தேவி
ஸ்ரீமத் ஸிம்ஹாச நேஸ்வரி
பக்தானாம் இஷ்ட தேஹிமி மாத:
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே

ஸ்ரீ லலிதையே, உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

சந்த்ரோதயம் கிருதவதி
தாடங்கேன, மஹேஸ்வரி
ஆயுர்தேஹி ஜகன்மாத:
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழு நிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

ஸுதா கடேச ஸ்ரீகாந்தே
சரணாகத வத்ஸலே!
ஆரோக்யம் தேஹிமே
நித்யமஸ்ரீ அபிராமி நமோஸ்துதே

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே... அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணம் மி மங்களம் தேஹி
ஜகத் மங்கள காரிணி
ஐஸ்வர்யம் தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வலோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக. அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்.

சந்த்ர மண்டல மத்யஸ்தே
மகாத்ரிபுர சுந்தரி !
ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி
ஸ்ரீஅபிராமி நமோஸ்துதே !!

சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுரசுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ரராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

ராஜீவ லோசனே, பூர்ணே
பூர்ணசந்த்ர விதாயினி !
சௌபாக்யம் தேஹி நித்யம்ஸ்ரீ
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே !!

தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முதன்மையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்.

கணேச ச ஸ்கந்த ஜநநி
வேதரூபே, தனேஸ்வரி
வித்யாம் ச தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி மி நமோஸ்து தே

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேதசொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே... எனக்கு வித்யையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்.

ஸுவாஸிநிப்ரியே மாதா:
ஸௌமாங்கல்ய விவர்த்தினி
மாங்கல்யம் தேஹிமே நித்யம்
நமோஸ்துதே

சுவாசினிகளால் போற்றப்படுபவளே. சௌமாங்கல்யப் பதவியை அதிகரிப்பவளே (பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்பவளே.) எனக்கு நித்யசௌ மாங்கல்யத்தை அருள்வாய் தாயே...! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

மார்க்கண்டேய மஹாபக்த
ஸுப்ரமண்ய ஸுபூஜிதே
ஸ்ரீராஜராஜேஸ்வரி த்வம் ஹி
ஸ்ரீஅபிராமி நமோஸ்து தே

மார்க்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யராலும் (அபிராமி பட்டர்) நன்கு பூஜை செய்து வழிபடப்பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா... ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

ஸாந்நித்யம் குரு கல்யாணி
மமபூஜா க்ருஹே சுபே
பிம்பே தீபே ததா புஷ்பே
ஹரித்ராகுங்குமே மம

கல்யாணியே (மங்களம் அருள்பவளே) என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக.

ஸ்ரீஅபிராம்யா இதம் ஸ்தோத்ரம்:
ய : படேத் சக்தி சந்நிதௌ
ஆயுர் பலம் யசோ வர்ச்சோ
மங்களம் ச பவேத்ஸுகம்

ஸ்ரீஅபிராமியன்னையின் இந்தத்துதியினை அகம் ஒன்றி தினம் சொல்பவர்க்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்யம், இவற்றோடு சகல சௌபாக்யமும் கிடைக்கும்

No comments:

Post a Comment

Reply Me