Thursday, September 17, 2009

பீன்ஸ் உசிலி


பீன்ஸ் :500 கிராம்
துவரம் பருப்பு :100 கிராம்
கடலை பருப்பு :100 கிராம்
மிளகாய் வத்தல் : 8
உப்பு
தாளிக்க:
கடுகு
ஊளுத்தம் பருப்பு
கருவேப்பிலை
செய்முறை
முதலில் பருப்புகள் இரண்டையும் சுமார் ½ மணிநேரம் ஊற வைக்கவும்.
பீன்ஸை பொடியாக கட் பண்ணவும்.பருப்புடன் மிளகாய் வத்தல்,உப்பு சேர்த்து கெட்டியாக நறநற வென்று அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை இட்லி தட்டில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வைக்கவும்.
வெந்தக் கலவையை தட்டில் கொட்டி உதிர்த்துக் கொள்ளவும்.
இப்பொழுது உசிலி தயார்.
ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு,பெருங்காயத்தை தாளித்து, அதனுடன் உசிலியை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
உசிலி சிறிது நிறம் மாறும் போது வெந்த பீன்ஸை போட்டு சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

No comments:

Post a Comment

Reply Me